வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

song

 

(ஆனந்த யாழை பாடல்)

விரும்பிப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ..

தமிழ் கடினமான பாடமில்லை என்று

அகர முதல எழுத்துகள் தான்

அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்

அம்மா என்பது உயிர்எழுத்து

அதில் ஆயிரம் உறவுகள் கூட்டுகிறாய்

புது சொற்கள் இணைந்து பேசிட

தமிழில்  பாஷைகள் எதுவும் போட்டி இல்லை ..

சிறு சொல்லில் கிரங்கும் சுவையில் தெரியும்

தமிழின் சிறப்போ எல்லையில்லை ..

தமிழ் நூல்கள் படித்து போகும் வழி ..

அது போதவில்லை இன்னும் வேண்டுமடி. .

இந்த மண்ணில் 
இது போல் மொழியும் இல்லை

யாரும் பேசவில்லை என்று தோன்றுதடி

அகர முதல எழுத்துகள் தான்

அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்

அம்மா என்னும் உயிர் எழுத்து
அதில் ஆயிரம் உறவுகள் கூட்டுகிறாய்

தூரத்து நாடுகள் பார்க்குதடி

தேன்மொழி தமிழா கேக்குதடி

தன்னிலை மறந்தே பேசுதடி

காற்றினில் வாசம் வீசுதடி

அடி ஆங்கிலம் எதற்கு?
பிறமொழி எதற்கு?
உனது சிறப்பே போதுமடி.

இ u uந்த மண்ணில் இது போல் மொழியும் இங்கே

யாரும் பேசவில்லை என்று தோன்றுதடி

உன் தமிழ் பார்த்தால் தோணுதடி

உலகத்து மொழிகள் சின்னதடி 

மேல் நாட்டு மொழிகள் பார்க்குதடி

உன்னிடம் கடனே கேட்குதடி

அதை ஓய்வில் படித்து
ஆறுதல் உரைத்து

வெளி நாட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் மொழியும் இல்லை

யாரும்  பேசவில்லை என்று தோன்றுதடி

அகர முதல எழுத்துகள் தான்

அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்.  .
💐💐மழலைக்கவி 💐

சிறார்திரைப்படம்

 Download  Click here