புதன், 2 செப்டம்பர், 2020

வந்து போன மழை தந்து போனவை

 

வந்து போன மழை. .   

தான். . ! 

வந்து போன அடையாளமாய் 

தந்து போனவை . .!   

தவளைகள் இசைத்து மகிழ  

வயல்வெளிகள் நிறைய நீரை. .! 

நண்டுகள் வளையிட 

நனைந்த மண்குழைவை. .! 

கொக்குகள் தவமியற்ற 

ஏரியில்  நீரை. .! 

வாத்துகள் நீந்தி மகிழை 

குளங்களில் தண்ணீரை.  .!

மரங்கள் துளிர்த்திட 

உயிர்த்துளியை.  .!

மாடுகள் மேய்ந்திட 

புல்வெளியை.  .!

பயிர்கள் செழித்திட 

பசுந்தேனை.  .!

மனிதர்கள் உயிர்வாழ  

உயிர்நீரை. .!



மழலைக்கவி 

2-09-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here