சனி, 11 ஜூலை, 2020

பாவை நீயும் எனதழகே !!

மழையில் குளித்த நிலவொன்று கண்முன் வந்தது அழகாக    ! 

மன்மதன் கோயில் சிலையொன்று 
எதிரே வந்தது ரதியாக.! 

கார்குழல் விரித்த மயிலாக 
கவரும் அழகுத் தாரகையே  ! 

மயக்கும் பார்வை விழியாளே 
மயங்கும் எதுவும் உன்அழகாலே ! 

பாடும் குயிலே நீயும் தான் 
பச்சை வண்ண புடவை கட்டி  ! 

தங்கச்சரிகை போட்ட படி 
தவழும் அன்ன நடையழகே ! 

வண்டைக்கவரும் வாசத்தால் 
வளம் குறையா பூ நீயே  ! 

உண்டு களித்திடும் தேன் சுமந்த 
இன்பம் குறையா தாமரையே  ! 

தேனைச் சொட்டும் இதழ்களையே
சுவைக்க தெரியா வண்டுகளே  ! 

இருக்கும் ஊரின் நீ இருந்து 
வருவது என்ன புறப்படுவாய்  ! 

தேவலோகம் விலகி வந்த 
தேவதை உந்தன்  புகழ் அறியாத. ! 

மானிடக் கூட்டம் வாழுமிடம் 
மங்கை உனக்கு ஏற்றதுவோ ! 

இந்திரலோகம் உனை அழைக்க 
இருந்திடல் இங்கு முறை தானோ. .! 

பிரமன் செய்த  பேரழகே 
பிரபஞ்ச ராணி நீ தானே.  .! 

பார்வை கொண்டு சாய்த்திடுவாய் 
பாவை நீயும் எனதழகே.  .. 

               மழலைக்கவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here