வியாழன், 9 ஜூலை, 2020

நா. முத்துக்குமார்

நா.முத்துக்குமார்
பிறந்தநாள் வாழ்த்துகள்!!! 

காஞ்சியில் பிறந்த 
கருப்புத்தமிழன்
தாயை இழந்த
தமிழ்த்தாயின் தலைமகன்
பட்டாம்பூச்சி விற்க வந்து
தேசிய விருதுகள் வாங்கியவன்..

வறுமையை படித்து 
அறிவால் வென்றவன்
அறிவுமதியையே 
அன்பால் வென்றவன்
அளவிடா உறவுகளை 
அன்பால் பினைத்தான்
அன்பின் நீர் பாய்ச்சி 
நட்புகள் வளர்த்தான் ! 

பயணங்களின் காதலன் 
பாசம் நிறைந்த படைப்பாளி
கருணாவின் 
உள்ளம்கவர்ந்த சகோதரன்
செல்லதுரை வீட்டு 
செல்லப்பிள்ளை 
மீன்குழம்புக்கு வரையறை 
எழுதிய மீன் விரும்பி 

தன்னை புதுப்பித்து 
தமிழால் புதுமை செய்தவன்
தமிழ் வளத்தை காத்தவன்
தன் நலத்தை கவனிக்காதவன்
மஞ்சள்காமாலை  கடந்திருந்தால்
மஞ்சள் பட்டாடை புகழ்பரப்பும்
காஞ்சியின் புகழ் தெரிந்திருக்கும்
கனவெல்லாம் பளித்திருக்கும் 
கனவு படைப்பான சில்க் சிட்டி
நோபல் பரிசுகூட கிடைத்திருக்கும்

நோய் என்ற ஆயுதத்தால்
காலன் செய்த மாய வித்தை
காலத்தின் வலை மீனாய்
காலமானான் மீன் விரும்பி..

விட்டுவைத்து சென்ற இடம் 
வீரத்தமிழ் தலை கிரிடம்
உனக்கான இடம் அதற்கு 
உனை அன்றி போட்டி இல்லை
தரணியிலே  உன் புகழை
மிஞ்ச ஒரு ஆளுமில்லை 
தமிழா நீ சாகவில்லை
தமிமும் இசையுமாய் வாழ்கிறாய் ..
தமிழ் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
வாழ்க வளமுடன்.

  மழலைக்கவி
 க.மகேஸ்வரன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here