வியாழன், 9 டிசம்பர், 2021

10 வகுப்பு தமிழ் திருப்புதல் தேர்வு - I

 

                  தமிழ் மாதிரி திருப்புதல் தேர்வு - I

      வகுப்பு: 10                                  மதிப்பெண்கள் : 50

      பாடம்: தமிழ்                                            நேரம் 1.3

               பகுதி-1

I .அனைத்து வினாக்களுக்கும் விடையளி 1 X 7 = 7

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்...........

() எந் + தமிழ் + நா () எந்த + தமிழ் + நா..

() எம் + தமிழ் + நா- () எந்தம் + தமிழ் + நா

2.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

() குலைவகை () மணிவகை.

() கொழுந்துவகை () இலைவகை

3.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்.............................

() துரை. மாணிக்கம் (), கண்ணதாசன்

() திருவள்ளுவர். () சுரதா

4.பெரிய மீசை சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை.....

() பண்புத்தொகை. () உவமைத்தொகை.

() அன்மொழித்தொகை () வினைத்தொகை

5'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'- தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

அ. பாடிய கேட்டவர்

ஆ பாடல்; பாடிய

இ. கேட்டவர் பாடிய

ஈ. பாடல் கேட்டவர்


6. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ. உருவகம், எதுகை

ஆ. மோனை, எதுகை

இ. முரண், இயைபு

ஈ. உவமை, எதுகை


7.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

அ. வேற்றுமை உருபு

ஆ. எழுவாய்

இ. உவம உருபு

ஈ. உரிச்சொல்

 

           பகுதி – 2

           பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2 X 2 = 4

8 .விடைக்கேற்ற வினா அமைக்க :

1. நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்றவர் மகாகவி பாரதியார்.

2.திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.

9.  ப்ராண ரஸம்- பொருள் தருக.

கட்டாய வினா 10க்கு விடையளிக்கவும்

10. 'பல்லார் ' எனத் தொடங்கும் குறளை எழுதுக.

                 பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2 X 2 = 4

11 மூவகை மொழிகள் யாவை?

12 அகராதியைக் கண்டு -பொருள் எழுதுக.

1.அடவி 2.பழனம்

13.பகுபத உறுப்பிலக்கணம் தருக. 1.பொறித்த



                    பகுதி - 3.

                   பிரிவு-1

எவையேனும் ஒருவினாவிற்கு மட்டும் 

சுருக்கமாக விடையளி            1 X 3 = 3

14. புளியங் கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபோல். இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

15.கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு. விடை எழுதுக.

மின் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை (புறம்,51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். இது போன்றே மதுரை இளநாகனார் கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று வேகத்தைப் பற்றக் குறிப்பிட்டுள்ளார்..

1.வளி மிகின் வலி இல்லை என்றவர் யார்?

2.கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்றவர் யார் ?

3.உரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக?

               பிரிவு.2

எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1 X 3 = 3

16.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

17.அன்னை மொழியே - எனத் தொடங்கும் பாடலைப் பிழையின்றி எழுதுக.

              பிரிவு-3

எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளி 1 X 3 = 3

18. பொருளுக்கேற்ற அடிமைப் பொருத்துக

உயிரை விடச்சிறப்பாகப் பேணிக்காக்கப்படும்

ஒழுக்கத்தின்எய்துவர் மேன்மை

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது

உயிரினும் ஓம்பப்படும்

ஒக்கத்தின்வழி உயர்வு அடைவர்


நடுஊரில் நச்சு மரம் பழுத்தற்று


19. கொடுப்பதுவம் துய்ப்பதுவும் இல்லார்க்கு அடுக்கிய

கோடி உண்டாயினும் இல் -இக்குறளில் வரும் அளபெடையை விளக்கி எழுதிக.

              பகுதி - 4.

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு 

மட்டும் விடையளி                                   2 X 5 = 10

20 .தற்குறிபேற்றஅணி விளக்கும் ?

21.மொழி பெயர்க்க:

The Golden Sun gets up early in the morning and starts it's bright rays to fade away the dark. The milkey clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrances fills the breeze, gently blows everywhere and makes. every thing pleasant.

22.காட்சியைக் கண்டு கவிதை எழுதுக.



              பகுதி-5

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி. 2 X 8 = 16

23.சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.?

24.அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கம் உள்ள பொருந்தப்பாடு - கோபல்லபுரத்து மக்கள் ?

25. மரம் இயற்கையின் வரம் - என்னும் தலைப்பில் வாழ்த்துமடல் எழுதுக.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here